Friday, July 25, 2025

ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் : மத்திய அரசு அறிவிப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் போன்ற பிரச்சனைகள் பெரும் புயலை கிளப்பி வருகின்றன. இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருவதால் இரு அவைகளும் முடங்கின.

இதற்கிடையில், மத்திய ஆயுதப்படைகள் மற்றும் அசாம் ரைபிள் படைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் பதிலளித்தார்.

அதன்படி, இதில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 868 காலியிடங்கள் உள்ளன என்றும் இதில் 72 ஆயிரத்து 689 இடங்களுக்கு ஆட்சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news