Saturday, June 7, 2025

யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு

போட்ஸ்வானா நாட்டில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்கின்றன.

அதற்கு அடுத்தபடியாக உலகின் 2வது அதிக யானைகளை கொண்டுள்ள நாடான ஜிம்பாப்வேயில், கடந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, Save valley வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தன. ஆனால், அந்த பகுதியின் சுற்றுச்சூழல் திறனுக்கு 800 யானைகள் இருந்தாலே போதும் என அறிக்கை கூறுகிறது.

அதன்காரணமாக சுமார் 200 யானைகள் வேறு சரணாலயங்களுக்கு மாற்றப்பட்டன. இருப்பினும் அதிகரித்து வரும் யானைகளின் பெருக்கத்தால், அவற்றை கொல்ல அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 50 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளது.

யானைகளில் இருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் என தெரிவித்துள்ளது. யானைகளை வேட்டையாடும் நடவடிக்கை உலகளவில் கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news