இந்தியா – பாகிஸ்தான் இடையேயான நீர் பிரச்சனைகள் இப்போது ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் வெளியிட்டுள்ள கடும் எச்சரிக்கை, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுவது என்னவென்றால் – தண்ணீர் என்பது பாகிஸ்தானின் உயிர்நாடி. 240 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம். அதிலே எந்த சமரசமும் பாகிஸ்தான் செய்யாது. இந்த நீர்தான் பாகிஸ்தானின் சிவப்பு கோடு. அந்த சிவப்பு கோட்டை இந்தியா தாண்டிவிட்டது என்பதையே அவர் கூறுகிறார்.
இந்தியாவை ரணவெறியுடன் குற்றம் சாட்டிய பாகிஸ்தான் ராணுவம், தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், இது சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவதாகவும் கூறுகிறது. மேலும், இந்தியா பிராந்திய அமைதியை குலைக்க முயலுகிறது என்ற காரியத்தையும் முன்வைக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ தகவல் பிரிவு இயக்குநர், “நீங்கள் தண்ணீர் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம்” என்று நேரடியான மிரட்டலைவிடுத்துள்ளார். இந்தக் கருத்துகள், தீவிரவாதி ஹபீஸ் சயீத் முன்பு கூறிய வார்த்தைகளுடன் ஒரேபோல் ஒத்துபோகின்றன. இதனால்தான் பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாத அமைப்புகளும் ஒரே மரத்தின் இரண்டு கிளைகள் என்றழைக்கப்படுகின்றன.
இந்தச் சர்ச்சையின் முக்கிய காரணம் – 1960இல் உலக வங்கி நடுவராக இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம். இதன் படி, இந்தியா பியாஸ், ரவி, சட்லெஜ் ஆகிய கிழக்கு நதிகளை, பாகிஸ்தான் சிந்து, செனாப், ஜீலம் ஆகிய மேற்கு நதிகளை பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது, இந்தியா இந்த ஒப்பந்தத்தை கைவிட்ட நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாபில் பாயும் செனாப் நதி மூன்று வாரங்களாக வற்றியுள்ளதாம். இது பாகிஸ்தானுக்கே பேரழிவாக மாறியிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கையும், அந்த நாட்டை பாதித்துவரும் நீர் தட்டுப்பாடும், இந்த பிராந்தியத்தின் அமைதியை கடுமையாக பாதிக்கும் வகையில் உருவெடுத்து வருகிறது.”