Saturday, May 31, 2025

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் : எதுக்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம்  கொண்டாடப்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) ஏற்பாடு செய்யும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். 

உலகிலேயே அதிக அளவில் புகையிலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். புகையிலை பயன்படுத்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கின்றனர்.

புகையிலை புகைப்பவரின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அருகில் இருப்பவரின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.  புகையிலையை தொடர்ந்து பயன்படுத்துவதால் இருதய பிரச்னைகள், ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், ரத்தக்குழாய் அடைப்பு போன்றவை ஏற்படுகிறது. மேலும் நுரையீரல் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், வயிறு புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது.

புகை பிடிப்பதால் எந்தவிதமான நன்மையும் கிடையாது. அதனை விட்டுவிடுவதுதான் நல்லது. மனக் கட்டுப்பாட்டால் மட்டுமே சிகரெட்டிலிருந்து முழுமையாக விடுபட முடியும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news