பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் ராமதாசும், கட்சி தலைவர் அன்புமணியும் இடையிலான கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ள சூழலில், அன்புமணி, தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில் குருமூர்த்தியும் ராமதாசை சந்தித்து உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நான் பாஜகவுக்காக பேச வரவில்லை. ராமதாஸ் என் நீண்ட கால நண்பர். வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றார்.