பிளஸ் 2, 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி, இந்த கல்வியாண்டுக்கான (2025-2026) பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை தரப்பில் வரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வு அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்வுத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக பேசியது ‘பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது. பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு கால அட்டவணை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும், அதன் பின்னர் அனுமதி கிடைத்தவுடன், தேர்வுக் கால அட்டவணையை நவம்பர் 4-ஆம் தேதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
அதிலும், குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே,பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கான கணிக்கப்பட்டுள்ள தேதியை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது.
இந்த தேர்வில் மொத்தம் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 204 பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி, 2026ம் ஆண்டு கல்வியாண்டுக்காக 10,12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வு பிப்ரவரி 17 முதல் ஜுலை 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பின்னர், தேர்வு முடிந்த 10 நாட்களுக்குள் அந்தந்த வினாத்தாள்கள் மதிப்பீடும் செய்யும் பணி தொடங்கம் என்றும் அடுத்த 12 நாட்களுக்கு வினாத்தாள் மதிப்பீடு முடிவடையும் என்றும் CBSE தெரிவித்தது.
