Monday, May 19, 2025

2025 ITR எப்போ வரும்?  ரீபண்ட் கிடைக்குமா? புதிய வரி MASS Update!

இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி வருமான வரி தாக்கல் கால அவகாசம் துவங்கியிருந்தாலும், 2025-26 நிதியாண்டுக்கான ITR தாக்கல் பக்கம் இன்னும் வருமான வரி இணையதளத்தில் திறக்கப்படவில்லை. இதனால் சம்பளதாரர்கள், வாடகை வருமானம் பெறுபவர்கள், தொழிலாளர்கள் என பலரும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

பழைய வரி முறையில் 2.5 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை.

2.5 – 5 லட்சம் வரையில் 5% வரியும் , 5 – 10 லட்சம் வரை 20% வரியும் , 10 லட்சத்திற்கு மேல் 30% வரியும்  விதிக்கப்படுகிறது. 80C, 80D போன்ற பிரிவுகளில் முதலீடு, காப்பீடு செலவுகள் மூலமாக வரி விலக்கு பெறலாம்.

இந்த ஆண்டின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, வீட்டு வாடகை வருமானத்தில் TDS கட்டும் வரம்பு ஆண்டுக்கு ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாத வாடகை ₹50,000க்கு மேல் இருந்தால்தான் TDS கட்ட வேண்டும். இது சிறிய அளவில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு நன்மை தரும்.

புதிய வரி முறையில் ₹12 லட்சம் வருமானம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்லாப் படி: 

0-3 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு – 0% வரியும் , 

3-6 லட்சம்வருமானம் பெறுபவர்களுக்கு  – 5% வரியும் , 

6-9 லட்சம்வருமானம் பெறுபவர்களுக்கு  – 10% வரியும் , 

9-12 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு – 15% வரியும், 

12-15 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு  – 20% வரியும், 

15-18 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு – 25% வரியும், 

18 லட்சத்திற்கு மேல் – 30% வரியும் விதிக்கப்படும்.

சிலர் கடந்த ஆண்டு ITR தாக்கல்செய்தும், தவறான தகவல், e-verification செய்யாமை காரணமாக ரீபண்ட் தொகை பெற முடியவில்லை. வங்கி விவரங்கள், மின்னஞ்சல், முகவரி சரியாக உள்ளதா என சரிபார்த்தல் அவசியம்.

இந்த ஆண்டுக்கான ITR தாக்கல் கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 5.83 கோடி பேர் தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு 7.5 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையதளம் திறந்தவுடன் உடனடியாக ITR தாக்கல் செய்து e-verification செய்வது அவசியம்.

Latest news