பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் எப்போது காலாவதியாகும் ?

பொது நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்கப்படுவது இன்று சர்வ சாதாரணமான ஒன்றாகவும் அத்தியாவசமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.தற்போது கடைகளில் வாங்கு அனைத்து பொருட்களுக்கும் குறிப்பிட்ட காலாவதி தேதி உண்டு. இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவற்றைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்பதாகும்.

PET அல்லது உணவுக்கான மற்ற பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் காலப்போக்கில் பலவீனமடைகிறது. அந்தப் பாட்டில் தொடர்ந்து சூரிய ஒளியில் அல்லது வெப்பமான பகுதியில் இருந்தால், பிளாஸ்டிக்கின் சில கூறுகள் தண்ணீரில் கலக்கக்கூடும். அவ்வாறு நடந்தால், அத்தகைய தண்ணீரைத் தொடர்ந்து அருந்துவது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை பல நாட்களுக்கு நேரடி சூரிய ஒளியில் வைத்தால், அது தண்ணீரின் தூய்மையையும் சுவையையும் பாதிக்கக்கூடும்.கடையில் வாங்கி குடிக்கும் தண்ணீர் பாட்டிலின் மூடியை திறந்து உள்ளே இருக்கும் தண்ணீர் குடித்தால், அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த நீரை குடித்து விடுங்கள் அல்லது தூக்கி எறிந்து விடுங்கள். அந்த பாட்டிலை பல நாட்கள், பல மாதங்கள் வைத்து குடிப்பதை முடிந்த வரை தவிர்த்திடுங்கள்

காலாவதி தேதியைப் பொறுத்தவரை, காற்றுப் புகாத, மூடியை ஓபன் செய்யாத ஒரு பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை சுமார் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரை சேமித்து வைக்கலாம், ஆனால் பாட்டில் திறக்கப்பட்டிருந்தால், அதை கூடிய விரைவில் பயன்படுத்திவிட வேண்டும்.

Related News

Latest News