சீன அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பாக அதிபர் சி ஜின்பிங் உடன் செல்லும் பாதுகாப்புக் குழுவினர் எப்போதும் கைகளில் கருப்பு குடை ஒன்றைக் கொண்டிருப்பதை காணலாம். இது சாதாரண குடை அல்ல, அதன் பின்னால் ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மறைந்துள்ளது.
இந்த “குடை”கள் உண்மையில் பல்நோக்கு பாதுகாப்பு உபகரணங்கள். வெளியில் பார்ப்பதற்கு ஒரு சாதாரண குடை போலத் தோன்றினாலும், அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை. சிலவற்றில் துப்பாக்கி குண்டுகளைக் தடுக்கக் கூடிய குண்டு-எதிர்ப்பு பொருள் அதாவது Bulletproof material பொருத்தப்பட்டுள்ளது. அவை அவசரநிலையில் கவசமாக பயன்படுத்தப்படலாம்.
மேலும், சில குடைகள் மின்சாரம் செலுத்தும் கருவிகளாகவும் அல்லது Spray செய்யும் பாதுகாப்பு கருவிகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் தாக்குதல் நடந்தால் பாதுகாப்பு அதிகாரிகள் குடையைத் திறந்து, அதே நேரத்தில் தாக்குபவரை குழப்பி விட முடியும்.
மற்றொரு முக்கிய அம்சம் — குடைகள் தொலைநிலை சிக்னல் தடுப்பு கருவிகளையும் கொண்டிருக்கலாம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் ட்ரோன் அல்லது ரிமோட்-கட்டுப்பாட்டு தாக்குதல்களை தடுக்க முடியும்.
அதிபர் சி ஜின்பிங் பொதுவெளியில் தோன்றும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், இந்த “குடை படை” அவரைச் சுற்றி இருப்பது வழக்கம். வெளிப்படையாக ஒரு எளிய பொருள் போலத் தோன்றினாலும், அது சீன பாதுகாப்பு முறைமையின் ரகசிய கவசம் எனலாம்.
இதனால், “சாதாரண குடை” என தோன்றும் அது உண்மையில் உயர் பாதுகாப்பு கருவி. அதிபரை உயிர் பாய்ச்சும் நிழல் போல காக்கும் சாதனம்.
