ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக, இந்திய ரயில்வே நெட்வொர்க் உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க்காக உள்ளது.
ரயில்களில் நாள்தோறும் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த சூழலில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மூடப்படும் ஒரே ஒரு நிலையம் இருக்கிறதாம், அது எது என்று தெரியுமா? தற்போது அதனைப் பற்றி பார்க்கலாம்.
அதாவது, இந்த தனித்துவமான ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தில் உள்ள பர்தமன் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பர்தமன் நகரத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நிலையம், குறைந்த பயணிகள் ரயில்களுக்கு சேவை செய்கிறது.
அந்த வகையில், பான்குரா-மாசகிராம் பயணிகள் ரயில் மட்டுமே இந்த ரயில் நிலையத்தில் நிற்கிறது. ஆனால் அந்த ரயில்களும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓடாது என்பதால், அன்று ரயில் நிலையம் மூடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
இதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது. அதாவது, இந்த ரயில் நிலையத்திற்கு நியமிக்கப்பட்ட நிலைய மேலாளர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ரயில் டிக்கெட்டுகளை வாங்க பர்தாமன் நகரத்திற்குச் செல்ல வேண்டுமாம்.
மேலும், அதே சமயத்தில் , நிலையத்தில் வேறு ஊழியர்கள் இல்லாததால், அந்த நாளில் டிக்கெட் கவுண்டர் முழுமையாக மூடப்படும். இதனால் தான், ரயில்வே துறை அந்த நாளில் நிலையத்தை முழுமையாக மூடி வைத்திருக்கிறது.
இந்த நிலையத்திற்கு அதிகாரப்பூர்வ பெயர் இல்லையாம். எனினும், பழங்காலத்திலிருந்தே, “ரேநகர்” என்ற பெயர் டிக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளது. பன்குரா மற்றும் மசாகிராம் இடையே பயணிப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான நிறுத்தப் புள்ளியாவும் பார்க்கப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் கூறுவது போல், இந்த நிலையம் சிறியதாக இருந்தாலும், அங்கு இருக்கும் கிராமப்புறங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதாம். அதாவது , நகரங்களுக்குச் செல்லும் சிறு வணிகர்கள், மாணவர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்திய ரயில்வே வரலாற்றில் இந்த தனித்துவமான ரயில் நிலையம் ஒரு தனித்துவமான அடையாளமாக பார்க்கப்படுகிறது.
24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் நாடு முழுவதும் இயங்கும் நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் கொண்ட ஒரே ரயில் நிலையம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.