Sunday, August 17, 2025
HTML tutorial

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு என்ன ஆனது? – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று முடிந்துள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். பட்ஜெட் தாக்கல் நடப்பதற்கு முன்பு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவர் பேசியதாவது : பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பு என்ன ஆனது? ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் ரூ.3 குறைக்கப்பட்டது. டீசல் விலை குறைக்கப்படவில்லை.

மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ரேஷனில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News