Sunday, December 28, 2025

சென்னைக்கு தடை இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் : அமைச்சர் கே.என்.நேரு

அடுத்த கோடைகாலம் வரை சென்னைக்கு தடை இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

வளசரவாக்கம் தொகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் காரபாக்கம் கணபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் கடந்த ஆட்சி காலத்தில் 900 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது என்றும் தற்போது ஆயிரத்து 110 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

தற்போதுள்ள தண்ணீர் கோடை காலம் வரை போதுமானதாக இருக்கும் என்றும் அடுத்த கோடை காலம் வரை, தடை இல்லாமல் தண்ணீர் அளிக்க இருப்பு உள்ளது என தெரிவித்தார்.

Related News

Latest News