Friday, May 23, 2025

சென்னை மக்களின் கவனத்திற்கு.. நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் நாளை (மே 24) காலை 8 மணி முதல் 25-ம் தேதி காலை 8 மணி வரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரியமேடு, சவுக்கார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள, வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news