2025 ஜனவரி 20 … டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்பு செய்த நாள். அன்றுதான், உலகின் முதலான தொழிலதிபர் எலான் மஸ்க்கை, “சூப்பர் ஜீனியஸ்”, “நட்சத்திரம்” என புகழ்ந்தார் டிரம்ப். மஸ்க் மட்டும் Trump-ஐ வெள்ளை மாளிகைக்கு திரும்ப அழைக்க 100 மில்லியன் டாலர்கள் செலவழித்திருந்தார். அந்த நேரத்தில் அவர்களின் உறவு… அரசியலை தாண்டி, குடும்பத்தைப் போலவே இருந்தது.
ஆனால் இன்று, அந்த நட்பு முற்றிலும் மாறிவிட்டது. மூன்றாம் உலகப் போர் பேசப்படும் நிலையில், உலகின் சக்திவாய்ந்த அரசியல்வாதி மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் – இவர்களுக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. காரணம் – ஈகோ, அதிகாரம், மற்றும் ரகசியங்கள்.
மஸ்க், டிரம்ப் மத்திய அரசில் புதிய துறையான DOGE -அதாவது Department of Government Efficiency தலைவராக இருந்தார். அவர் ராஜினாமா செய்த பிறகு, சில ரகசிய ஆலோசனைகள் வெளியில் கசிய ஆரம்பித்தன. சீனாவுடன் போர் ஏற்பட்டால் என்ன நடக்கும், அமெரிக்காவின் போர் திட்டங்கள் என்ன – இதுபோன்ற ரகசிய ஆவணங்கள் மஸ்க்கிடம் சென்றதாக தகவல்கள் வந்தன.
இதை முதலில் மறுத்த டிரம்ப், பின்னர் அதிர்ச்சி அடைந்தார். “அவர் ஒரு தொழிலதிபர். அவரிடம் இதையெல்லாம் சொல்வது ஏன்?” என பென்டகனை கடிந்தார். இதையடுத்து, மஸ்க் – “நான் இல்லையெனில் டிரம்ப் வெற்றிபெறமாட்டார். நன்றி கெட்டவர் !” என X தளத்தில் பதிலடி கொடுத்தார்.
அதற்கு பதிலாக, டிரம்ப் – உடனே தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், மஸ்கின் வணிக சாம்ராஜ்யத்தை குறிவைத்து ஒரு கருத்தை வெளியிட்டார். “நமது பட்ஜெட்டில் பணத்தை சேமிக்க எளிதான வழி, எலான் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்வதுதான்” என்று அவர் எழுதினார்.
பதிலுக்கு எலன் மஸ்க்கும் “தைரியமிருந்தால் இதைச் செய்யுங்கள்” என்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இந்த மோதல் காரணமாக ஒரே நாளில் டெஸ்லா பங்குகள் 150 பில்லியன் டாலர் மதிப்பு குறைந்தது. மஸ்கின் தனிப்பட்ட சொத்துக்கள் சுமார் 20 பில்லியன் டாலர் குறைந்தது. டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு எக்ஸ் பயனர் கேட்ட கேள்விக்கு, மஸ்க் “ஆம்” என்று பதிலளித்தார்.
இதனால் கோபமடைந்த மஸ்க், “நான் இனிமேல் அரசியலுக்கு நிதி அளிக்க மாட்டேன்” என்று அறிவித்தார். இப்போது, அவர் புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டுமா என அவரது பின்தொடர்பவர்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறார்.
இந்த மோதல், இனிமேல் ஒரு சாதாரண கருத்து வேறுபாடு இல்லை. இது அமெரிக்க அரசியலையே கவிழ்த்துவிடக்கூடிய சக்தி பெற்றது. கிங் மேக்கரும், அவரால் உருவாக்கப்பட்ட அரசருமான டிரம்பும், இப்போது ஒருவரை ஒருவர் தள்ளி வைக்க முயற்சிக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் தனது அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யலாம் என கூறியதையடுத்து, எலான் மஸ்க் டிராகன் விண்கலத்தை நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் நாசா மற்றும் சர்வதேச விண்வெளி நிலைய திட்டம் பாதிக்கப்படும் என கவலை எழுந்தது, ஏனெனில் டிராகனே அமெரிக்காவின் ஒரே மனிதர் கடத்தல் விண்கலமாக உள்ளது. நெட்டிசன்களின் கடும் விமர்சனத்தையடுத்து மஸ்க் தனது முடிவை மாற்றி, “நாங்கள் டிராகனை நிறுத்த மாட்டோம்” என கூறினார். இருப்பினும், டிரம்ப்–மஸ்க் மோதல் தொடர்ந்து தீவிரமடைகிறது.
இந்த விவகாரம் எங்கு போகும்? மஸ்க் வெளிக்கொணரும் ரகசியங்கள் என்னென்ன? டிரம்பின் பதவிக்கு ஆபத்து வருமா? இது எல்லாம் வரும் நாட்களில் தெரிய வரும்….