அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.
பொங்கல் திருநாள் விடுமுறையில் வெளியாகவிருந்த விஜய்யின் ஜன நாயகன், தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜய்யின் மாஸ்டர், லியோ படங்களை ரீ-ரிலீஸ் செய்வதாய் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தெறி படமும் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
