Sunday, June 1, 2025

‘ஜன நாயகன்’ படப்பிடிப்பு நிறைவு… சென்னை திரும்பினார் விஜய்! 

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ’ஜனநாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கொடைக்கானலில் நடைபெற்றது. இதற்காக கடந்த மே 1-ம் தேதி விஜய் மற்றும் படக்குழுவினர் அங்கு சென்றனர்.

இந்நிலையில், கொடைக்கானலில் ’ஜனநாயகன்’ படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் விஜய் அங்கிருந்து கார் மூலம் மதுரை புறப்பட்டார். இதையடுத்து மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்பினார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news