விளைச்சல் பாதிப்பு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. சமீபத்தில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பயிர்கள் மற்றும் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, சந்தைகளுக்கு வரத்து குறைந்தது.
காய்கறி விலை உயர்வு
திருமண முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட காரணங்களால் காய்கறி நுகர்வு அதிகரித்துள்ளது. வெள்ளை கத்தரிக்காய் விலை கடந்த வாரம் கிலோ ரூ.120 ஆக உயர்ந்து, நேற்று ரூ.140 ஆனது.
தற்போதைய விலைகள்
| காய்கறி | விலை (ரூ. கிலோ) |
|---|---|
| தக்காளி | 80 |
| வெண்டைக்காய் | 80 |
| சின்ன வெங்காயம் | 50-75 |
| பல்லாரி | 25-30 |
| தேங்காய் | 65-70 |
| ஊட்டி கேரட் | 60 |
| உருளைக்கிழங்கு | 30-35 |
| முட்டைக்கோஸ் | 40 |
| பீட்ரூட் | 40 |
வியாபாரிகள், வருகிற பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
