Tuesday, July 15, 2025

இரண்டு கணவர்…இரண்டு தாலியுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண் இரண்டு தாலிகளை கட்டிக்கொண்டு ஒரே வீட்டில் இரண்டு கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உத்தர பிரதேசம் தியோரியா பகுதியை சேர்ந்த அந்த பெண் கூறியதாவது : ஒரு தாலி ஒரு கணவருக்காகவும், மற்றொரு தாலி இன்னொரு கணவருக்காகவும் அணிந்துள்ளேன். எனது கணவர்கள் இருவரும் சகோதரர்கள்.

நாங்கள் 3 பேரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 3 பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வோம், சேர்ந்து சாப்பிடுவோம், சேர்ந்து தூங்குகிறோம் என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news