Saturday, February 21, 2026

வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்., மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. அந்நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது, அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

இந்நிலையில், வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்துவதாகவும், இந்த விவகாரத்தில் ஐ.நா. உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ வலியுறுத்தியுள்ளார்.

Related News

Latest News