Friday, June 6, 2025

ரஷ்யாவிற்கு மீண்டும் பயங்கர அடி கொடுத்த உக்ரைன்! கதிகலங்கி நிற்கும் புதின்!

ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களில் இரு தரப்புகளும் நடத்திய தாக்குதல்கள், இந்த போர் இன்னும் எவ்வளவு ஆபத்தான நிலைக்குள் சென்று விட்டது என்பதை காட்டுகிறது. சமீபத்தில், உக்ரைன் ரஷ்யா மீது மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் ஏற்கனவே பதற்றம் நிலவியது.

ஆனால் அதிலிருந்து குணமடைய கூடவேண்டாம் போல, அடுத்த இரண்டே நாட்களில் உக்ரைன் ரஷ்யாவை மீண்டும் தாக்கியுள்ளது. இந்த முறை, ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையிலான மிக முக்கியமான பாலமான கெர்ச் பாலம் இலக்காக அமைந்தது.

கிட்டத்தட்ட 1,000 கிலோவுக்கு அதிகமான வெடிபொருட்களுடன், நீருக்கு அடியில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ‘ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப்’ என்ற ரகசிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்ததாக உக்ரைன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் வெடிப்புகள், மற்றும் பாலத்தில் ஏற்பட்ட சேதங்களும் தெளிவாகக் காணப்படுகின்றன.

உக்ரைன், இது கடந்த மூன்றாவது முறையாக கிரிமியா பாலத்தை தாக்குவதாக தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது, ஆனால் விரைவில் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த பாலம் ரஷ்யாவுக்குப் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மிக முக்கியமானது. ரஷ்ய படைகள், ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இந்த பாலத்தின் வழியே கிரிமியாவிற்கு சென்றடைகின்றன. அதனால்தான் இந்த தாக்குதல், பெரிய சேதம் இல்லாவிட்டாலும் கூட, ரஷ்யாவுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

கிரிமியா, 2014ல் ரஷ்யா கைப்பற்றிய பகுதியில் ஒன்றாகும். ஆனால் உக்ரைன் அதை சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்றும், மீண்டும் திரும்பப்பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. ரஷ்யா மட்டும் கிரிமியாவை ஒரு பிரிவாக கொடுக்கத் தயாராக இல்லையென்றதும், சமீபத்திய அமைதி பேச்சுவார்த்தைகளில் தெளிவாக தெரிந்துவிட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news