பிரிட்டனில் மருத்துவர் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்துக்காக தனது இரண்டு கால்களையும் அகற்றிய சம்பவம் நடந்துள்ளது.
நீல் ஹாப்பர் (49) என்ற அந்த மருத்துவர், ரூ.5.5 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைக்க முயன்றதாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளன.