ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண்கள் 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்த 75 வயது சேசம்மாள், கடந்த 27ம் தேதி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை சென்று, பின்னர் அரசு பஸ் மூலம் ஊருக்குப் புறப்பட்டார். அதிக பயணிகள் இருந்ததால், அவர் பஸ்சில் நின்றுகொண்டிருந்தபோது, வில்லுக்குறி பாலம் அருகே 2.5 சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலி காணாமல் போயுள்ளது.

இதை அறிந்ததும், அவர் பஸ்சை நிறுத்துமாறு கேட்டார். பஸ் நிறுத்தப்பட்டதும் நகையை தேடிய போது, இரண்டு பெண்கள் தப்பி சென்றதைக் கண்ட பயணிகள் சந்தேகத்துடன் அவர்களை சுற்றி பிடித்தனர்.

விசாரணையில், அந்த பெண்கள் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த 29 வயது பவானி, மீனாட்சி என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது. இவர்களை போலீசார் கைது செய்து, இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தக்கலை சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News