Wednesday, December 24, 2025

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று திரும்பிய இருவர் கைது

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நியாஸ் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவர்கள் போலி முகவரியில் பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டு பேரையும் ஏர்போர்ட் காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News