Wednesday, June 11, 2025

பெண் செய்தியாளரை துப்பாக்கியால் சுட்ட போலீசார்

லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்றப் போராட்டங்களைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஆஸ்திரேலிய தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளர் ஒருவர், போலீசாரால் ரப்பர் தோட்டாவால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட விரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்கள் கலவரமாக வெடித்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளர் ஒருவர் நேரலையிலேயே போலீசாரால் காலில் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news