சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு – சில ஆண்டுகளாக பதற்றமான ஒன்றாகவே இருந்து வருகிறது. வர்த்தகம் முதல் கல்வி வரையிலும், இந்த இரண்டு பெரிய நாடுகளும் ஒரு விளிம்புக்கே வந்துவிட்டன. ஆனால் இப்பொழுது, ஒரு புதிய திருப்புமுனை உருவாகியுள்ளது.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, சீனாவின் பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்தது.அது தான் சீனாவிற்கு எதிராக 240% வரி! இது சர்வதேச வர்த்தகத்தை பெரிதும் பாதித்தது. பதிலடியாக, சீனா முக்கியமான கனிமங்களின் ஏற்றுமதியை தடை செய்தது – இதனால் அமெரிக்காவின் தொழில்துறை மிகப்பெரிய அதிர்ச்சியடைந்தது.
இதற்கிடையில், சீன மாணவர்களின் அமெரிக்கப் பயணத்துக்கும் தடைகள் வந்தன. ஒருபக்கம் வரி, மறுபக்கம் கல்வி தடைகள் – இரண்டு நாடுகளும் கடுமையான பதற்றத்தில்…இருந்தது….
இப்படி அதிகரிக்கும் மோதலுக்கு இடையில், தற்போது ஒரு தற்காலிக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, சீனா அமெரிக்காவுக்குத் தேவையான அரிய வகை கனிமங்களை வழங்கும். அதே நேரத்தில், சீன மாணவர்கள் அமெரிக்காவில் மீண்டும் படிக்க அனுமதி பெறுவர். இந்த ஒப்பந்தத்தைத் தானாகவே உறுதிப்படுத்திய டிரம்ப், “இருநாடுகளுக்குமிடையே உறவு சிறப்பாக உள்ளது” என ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இது ஒரு இறுதி ஒப்பந்தம் அல்ல – சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் டிரம்ப் இடையிலான முடிவை பொறுத்தே இவ்வளவு நடக்கிறது.
அமெரிக்கா 55% வரி, சீனா 10% வரி எனும் புதிய வரி அமைப்பும் ஒரு பகுதியாக உள்ளது. வர்த்தக போர் ஓய்ந்தது போல தோன்றினாலும், இது ஒரு நேர்காணல் மட்டுமே.
இந்த ஒப்பந்தம்—மத்தியிலிருந்து ஒரு அமைதி தூதாக—உலக நாடுகளுக்கு ஒரு ஆறுதல் செய்தியாக இருக்கிறது.