அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆகஸ்ட் பிற்பகுதி முதல் அக்டோபர் தொடக்கம் வரை குறைந்தது 82 மில்லியன் டாலர் மதிப்புள்ள கார்ப்பரேட் மற்றும் நகராட்சிப் பத்திரங்களில் கலந்துகொண்டுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 28 முதல் அக்டோபர் 2 வரை அவர் 175 க்கும் மேற்பட்ட பத்திரங்களை வாங்கியதாகவும் இதன் மூலம் அவர் நிதி ஒழுங்குமுறை தளர்வு மற்றும் தொழில்நுட்ப விரிவாக்கம் போன்ற துறைகளில் பரபரப்பான முதலீட்டுகளை செய்திருப்பார்.
1978-இல் உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு பரிவர்த்தனை மதிப்புகள் துல்லியமாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் மதிப்பீட்டின் படி பத்திர கொள்முதல்களின் அதிகபட்ச மதிப்பு 337 மில்லியன் டாலரை தாண்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரியில் அதிபராக பதவி ஏற்றதைத் தொடங்கி 100 மில்லியன் டாலருக்கு மேல் பத்திரங்களை வாங்கியுள்ளார். ராய்ட்ரர்ஸ் கணக்கீடுகளின் படி, 2024 இல் டிரம்ப் கிரிப்டோகரன்சி, கோல்ஃப் சொத்துகள், உரிம ஒப்பந்தங்கள் மற்றும் பிற வணிகங்கள் மூலம் 600 மில்லியன் டாலருக்குமேல் சம்பாதித்தார்.
இதனால் அவரது மொத்த சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம், டிரம்ப் 2025 ஆம் ஆண்டின் மிக முக்கியமான வணிக முதலீட்டாளர்களில் ஒருவராக இருப்பது தெளிவாகிறது.
