ஜெர்மனியின் சிக்மரிஞ்சென் நகரில் இருந்து உல்ம் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பேடன்-வ்ரெட்டம்பேர்க் என்ற பகுதியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படை வீரர்கள், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 34 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதில், மரங்களில் மோதின. இதனால் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்த சம்பவத்திற்கு ஜெர்மனி அதிபர் பிரீட்ரிச் மெர்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.