இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்று ராஞ்சி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
