பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர், கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு பொது மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்த உள்ளனர். இதனை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 29 ஆம் தேதி) மற்றும் நாளை (அக்டோபர் 30 ஆம் தேதி) கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கே.கே. நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, A1 பார் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை சென்று ஓபுளா படித்துறை பாலம் வழியாக வைகை தென்கரைக்கு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வழியாக செல்ல தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை மற்றும் மேலூர் சாலைகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் தற்போது செல்லும் வழக்கமான வழித்தடங்களின் வழியாகவே செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆரப்பாளையம் மற்றும் பாத்திமா கல்லூரியில் இருந்து நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை, மேலூர் சாலை மற்றும் பனகல் சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் செல்லூர் கபடி ரவுண்டானா, எம்.எம்.லாட்ஜ் சந்திப்பு சென்று மேற்கூறிய வழித்தடங்களை பயன்படுத்தி செல்லலாம் அல்லது ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக செல்லலாம்.
