சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய இருக்கிறது.
அதாவது,நேற்று முன்தினம் ரூ.89.000-க்கு விற்பனை ஆனது. இதனைத் தொடர்ந்து ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11.125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11. 200-க்கு விற்பனை செய்யப்பட்டது
இந்த நிலையில் இன்று காலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஒரே நாளில் 2 வது முறையாக தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது. அதாவது. ரூ.680 உயர்ந்து ரூ.91.080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே, வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. அதாவது காலையில் விலையில் எந்த விதமாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.170க்கும், கிலோவுக்கு ரூ. 3,000 உயர்ந்து ரூ. 1,70,000 விற்பனை செய்யப்படுகிறது.