தங்கம் விலை வீழ்ச்சிக்கு இது தான் காரணம்! சரிவு இப்படியே தொடருமா?

அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாளுக்கு நாள் உயர்ந்து வந்த தங்கம் விலை, சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக மாறியிருந்தது.

ஒரு சவரன் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டும் அளவுக்கு சென்றதால், நகை பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். குறிப்பாக, ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரம் கடந்து விற்பனையாகியிருந்தது.

இந்த சூழலில், அக்டோபர் 17ம் தேதியான நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.12,200 ஆகவும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.97,600 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று, அக்டோபர் 18ம் தேதி தங்க விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.250 குறைந்து தற்போது ரூ.11,950க்கும், சவரனுக்கு ரூ.2,000 குறைந்து ரூ.95,600க்கும் விற்பனையாகி வருகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் குறைந்து, கிராமுக்கு ரூ.240 சரிவு ஏற்பட்டு தற்போது ரூ.9,860 ஆகவும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.78,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

டாலர் மதிப்பு உயர்வு, சர்வதேச தங்க வர்த்தக குறைவு ஆகியவை விலை சரிவுக்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும், இது நீண்டநாள் நிலைக்க வாய்ப்பு குறைவு. சர்வதேச சந்தை மாற்றங்களும், டாலர் மதிப்பும் மீண்டும் விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால், இந்த விலை வீழ்ச்சி தற்காலிகமானதே என்று கணிக்கப்படுகிறது.

Related News

Latest News