பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது : –
“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற பெயரில் தமிழகத்தில் புதியதொரு திட்டம் ஒன்றை முதல்வர் திரு.
மு.க ஸ்டாலின் அவர்கள் துவக்கி இருக்கிறார். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதல்வருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம்:
- சீரான சட்டம் ஒழுங்கு.
- கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம்.
- பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம்.
- திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம்.
- அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம்.
- ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம்.
- தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம்.
- அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம்.
- விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம்.
- கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.
- இந்துமத வெறுப்பில்லாத அரசு.
மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
