தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்றுசேர வேண்டும் என்றும், இருவரும் பா.ஜ.க. கூட்டணியில் தொடர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என தெரிவித்த அவர், தி.மு.க.வை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும் என கூறினார்.