Friday, June 13, 2025

‘இனி குடிக்க கூட தண்ணி இருக்காது’! மனிதர்கள் எதிர்பார்க்காத பேரழிவு! குறிப்பா இந்தியா?

பூமி ஒரு பேரழிவை நோக்கி நகர்கிறது என்றால் நம்ப முடியுமா? ஆனால், புதிதாக வெளியான ஒரு புவி ஆய்வு உண்மையில் அதே விஷயத்தைக் கூறுகிறது.

அமெரிக்க ஜியோபிசிகல் யூனியன் வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, கடந்த சில தசாப்தங்களில் மனிதர்கள் நிலத்தடி நீரை அதிக அளவில் பிரித்தெடுத்ததால், பூமியின் சுழற்சி சமநிலையே பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 4.36 சென்டிமீட்டர் வீதம், பூமி கிழக்கு நோக்கி சாய்ந்து கொண்டிருக்கிறது. மொத்தமாக, கடந்த இரு தசாப்தங்களில் பூமி 80 சென்டிமீட்டர் சாய்ந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

1993 முதல் 2010 வரை, பூமியின் அடிவாரத்திலிருந்து 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. இது, கடல் மட்டத்தில் 6 மில்லிமீட்டர் உயர்வுக்கு சமம். ஆனால் இந்த நீர் வெளியேறிய பிறகு, அதற்கான எடையால் இனி பூமியின் சமநிலையை சமமாக வைத்திருக்க முடியவில்லை.

பூமியின் உள்ளே இருக்கும் நீர், கிரகத்தின் சுழற்சி சமநிலைக்கு மிக முக்கியம். அந்த நீர் அகற்றப்பட்டதும், பூமியின் சுழற்சி அச்சிலும், சாய்விலும் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் காலநிலை, பருவமழை, புவி சுழற்சி — அனைத்தும் மாற்றத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த மாறுதலின் தாக்கத்தை மிகுதியான அளவில் எதிர்கொள்கிறது இந்தியா. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளில் நிலத்தடி நீர் கொடூரமாக சுரண்டப்படுகிறது. குழாய்க் கிணறு பாசனம், மக்கள் தொகை பெருக்கம் ஆகியவையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும், இந்தப் பகுதிகளில் நீர் மட்டம் ஆபத்தான நிலையில் குறைந்து வருகிறது. பருவமழையின் நிச்சயமற்ற தன்மை இதை மேலும் மோசமாக்குகிறது. இது வெறும் நீர் நெருக்கடியாக இல்லாமல், பூமியின் எதிர்கால வாழ்வுக்கே ஒரு பெரிய சவாலாக மாறுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news