உலகம் இன்று வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இந்த வெப்பமயமாதலால், வானிலை நிலையானதாக இல்லாமல் குலைந்துவிட்டது. எந்த நாடு எப்போது பாதிக்கப்படும் என்பது தெரியாமல், ஒவ்வொரு நாடும் ஒருபோதாவது தாக்கம் எதிர்கொள்வது உறுதி. அந்த வகையில், தற்போது தென்னாப்பிரிக்கா கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்த நாடு கடல்மட்டத்தில் இருந்து மெதுவாக மேலே எழும்பி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது ஒரு இயற்கையான மலை உருவாகும் ப்ராசஸ்ஸாக இல்லையென்று, GNSS செயற்கைக்கோளின் தகவல்களை வைத்து அவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த 2012 முதல் 2020 வரை அந்த செயற்கைக்கோளின் டேட்டா காட்டியது என்னவென்றால், தென்னாப்பிரிக்கா சுமார் 6 மில்லி மீட்டர் உயரம் அடைந்திருக்கிறது.
இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் – வறட்சி. தென்னாப்பிரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை கிடைக்கவில்லை. இதனால் நிலத்தில் உள்ள நீரெல்லாம் ஆவியாகி வாடிப்போய், நிலம் உயர்ந்து வருகிறது. இந்த மாற்றம் மிக மெதுவாக நடைபெறுவதால், பொதுமக்கள் அதை உணர்வதற்கே சிரமமாக இருக்கிறது. ஆனால் புவியியல் விஞ்ஞானிகள் இந்த மாற்றங்களை மையமாக வைத்து ஆய்வு நடத்தி, வறட்சியே முக்கியக் காரணம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அதே நேரத்தில், இத்தகைய வறட்சியால் 2015 முதல் 2019 வரையிலான காலத்திலும் தென்னாப்பிரிக்கா மேலெழுந்திருக்கிறது. அப்போது “Zero Day” என அழைக்கப்பட்ட தண்ணீரில்லா நிலையை அந்த நாடு எதிர்கொண்டது. இந்த ஆய்வுகளை உறுதி செய்ய NASA, ஜெர்மனியின் செயற்கைக்கோள்களிடம் உதவி கேட்டும் இருக்கிறார்கள்.
காலநிலை மாற்றம் என்பது வெறும் ஒரு அறிவியல் வார்த்தையல்ல. இது நம்முடைய நாளைய வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு சூட்சமமான சக்தி. இன்று தென்னாப்பிரிக்காவை பாதித்தது, நாளை இந்தியாவின் கடற்கரை நகரங்களை மூழ்கடிக்கும் அபாயத்தில் உள்ளதென விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் – நம்மால் ஏற்படுத்தப்படும் கார்பன் வாயுக்கள். இது வெப்பத்தை பூமிக்குள் பூட்டி வைக்கிறது. அந்த வெப்பம் கடல் நீரையும், நிலத்தடித் தண்ணீரையும் காய்ச்சி ஆவியாக்குகிறது. அதனால் தான் வெள்ளம், வறட்சி, பனிமேடுகள் உருக்கம் என உலகம் முழுவதும் கலக்கம். இப்போது நாம் மாற்றம் செய்யவில்லை என்றால், நாளை மாற்றங்கள் நம்மை கட்டாயமாகச் சோதிக்க வரும்.