Friday, April 18, 2025

அமெரிக்காவை பொளந்துகட்டும் உலக நாடுகள்! நடுமண்டையில் குட்டு வைத்த கனடா! கதறும் டிரம்ப்!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெசிப்ரோக்கல் வரி முறை உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வரி முறையில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதித்து பதிலடி நடவடிக்கை எடுக்கும். இதனால் உலகளாவிய வர்த்தகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா தற்போது பல நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலாக, பல நாடுகள் தங்களின் வரி நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. 

இவ்வாறு ஒவ்வொரு நாடுகளும் பதிலடியை கொடுத்து வரும் நிலையில் அமெரிக்காவின் நடுமண்டையில் குட்டு வைக்கும் வகையில் தற்போது  கனடா அதன் ஆட்டோமொபைல் இறக்குமதிகளில் 25% வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இது, அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு பதிலாக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரி, அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீறிய வாகனங்களுக்கே விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கனடா, இதன் மூலம் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஆட்டோமொபைல் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதற்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கின்றது. 

கனடாவில் இந்த வரி விதிப்பினால் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் உலகளாவிய வர்த்தக போர் தீவிரமாக விரிகின்றது. 

மேலும், இந்தியா, சீனா, கம்போடியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற பல நாடுகள் தங்களுடைய பதிலடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இவை அனைத்தும் உலகளாவிய பொருளாதாரத்தில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன.

இந்த வரி முறைகள் உலகளாவிய வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கின்றன. உற்பத்தி மற்றும் வர்த்தக நெறிமுறைகள் மாறும்போது, வர்த்தகத்தில் பெரும் நஷ்டம் ஏற்படும். உலக நாடுகள், இந்த சூழலை எப்படிச் சமாளிப்பது என்பது மிகவும் முக்கியமாக மாறிவிட்டது.

Latest news