Sunday, June 1, 2025

தங்கம் பக்கம் ஓடும் உலகம்! டிரம்ப் சூழ்ச்சி? டாலர் வீழ்ச்சி நிஜ காரணம் இதுதான்!

தங்கம் ஏன் இவ்வளவு உயர்ந்த விலையை எட்டியுள்ளது? ஏன் முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகம் நாடுகிறார்கள்? இதற்குக்கிடையே அமெரிக்க டாலருக்கு என்ன ஆகுது? என்பதைப் பற்றியெல்லாம் ஒரு வட்டமான புரிதலுடன் பாக்கலாம்.

சமீபமாக, தங்கம் விலை வரலாற்றில் இல்லாத ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்தியாவின் MCX சந்தையில் 10 கிராம் தங்கம் விலை ₹95,435 என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை ₹96,965 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் — அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி.

டாலரின் மதிப்பு ஏன் குறையுது? இதுக்குப் பின் நிறைய காரணங்கள் இருக்குது. முக்கியமானது — அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்த வரிப்போர். சில முக்கியமான தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர்கள், மருந்துகள் போன்றவற்றுக்கு அவர் வரி விதிக்க ஆரம்பித்ததால், அந்த நாடுகளும் பதிலடியாக நடவடிக்கைகள் எடுத்தன. இதனால் உலக சந்தையில் அமெரிக்கா மீதான நம்பிக்கை குறைய ஆரம்பிச்சது. இதன் தாக்கம் நேரடியாக டாலர் மதிப்பில் பிரதிபலிச்சது.

பேச்சு வார்த்தை ஓய்ந்தது, சந்தைகளில் பதட்டம் மேலோங்கியது. அப்போதுதான் முதலீட்டாளர்கள் “பாதுகாப்பான” சொத்துகள் என்று கருதப்படும் தங்கத்தை நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள். உலகம் முழுக்க புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற நிலை, மத்திய வங்கிகளின் கடன் கொடுப்பனவுகள் ஆகியவை எல்லாமே ஒரு பக்கம். இன்னொரு பக்கம், மக்களிடையே “என்ன நடக்கும்?” என்ற சந்தேகம். இந்த நிலையில், தங்கம் மட்டும் தான் நம்பிக்கையுடன் தெரிந்த ஒரு சொத்து.

அதனால்தான், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் விலை $3,314.29-டாலருக்கு வர்த்தகம் ஆனது. பிறகு $3,317.90 டாலர் என்ற உச்சத்தை அடைந்தது. இது வரலாற்றிலேயே இல்லாத ஒரு விலை.

இந்த விலை உயர்வை பார்த்து நீங்களும் நினைக்கலாம் — “தங்கம் வாங்கலாமா?” அதற்கான பதில் நிச்சயமாக உங்க முதலீட்டு இலக்கு, தேவைகள் மற்றும் சந்தை நிலையைப் பொருத்தே இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், தங்கம் ஒரு பாதுகாப்பான தங்குமிடமாக இருப்பது மட்டும் உறுதி.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news