ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமெனி குடும்பத்துடன் நேற்று சுரங்க பதுங்கு குழிக்குள் தஞ்சமடைந்திருப்பதாக செய்தி வெளியானது. இந்த பரபரப்பான சூழலில் ஈரானின் ‘உச்ச தலைவர்’ என்று அழைக்கப்படுபவர் எங்கே ஒளிந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். மேலும் அவர் “‘உச்ச தலைவர்’ ஒரு சுலபமான target தான் என்றாலும் மறைவிடத்தில் அவர் பாதுகாப்பாக இருக்கிறார்.
நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை, குறைந்தபட்சம் இப்போதைக்கு எங்கள் இலக்கு அவர் அல்ல” என்றும் கூறியுள்ளார். அத்துடன் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், அமெரிக்கா புதிய F-35 போர் விமானங்களுக்கான முன்பதிவு கட்டணத்தை பாதியாகக் குறைத்துள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன் மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானி கைது செய்யப்பட்டதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்தது.
அதனை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த தகவலை மறுத்தன. இருப்பினும் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது “ஏன் இந்த அதிரடி முடிவு” என்ற கேள்வியை எழுப்புவதாகவே இருக்கிறது.