அமெரிக்காவின் pearl harbour தாக்குதலை போல ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதலை இப்போது உக்ரைன் ரஷ்யா மீது நடத்தியிருக்கிறது. 1941 டிசம்பர் 7-ஆம் தேதி ஹவாயில் உள்ள pearl harbour கடற்படைத் தளத்தில் அமெரிக்காவை ஜப்பான் திடீரென தாக்கியது. அந்த தாக்குதலில் 3,500 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர், கடற்படை தளங்கள் நாசமாயின. அதே தாக்குதலால் அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் இறங்க வேண்டிய நிலைக்கு வந்தது. இதே போன்று இப்போது ரஷ்யா – உக்ரைன் போர் மையத்தில், ரஷ்யாவுக்கு மிகப்பெரிய இழப்பை உண்டாக்கும் வகையில், உக்ரைன் திட்டமிட்டு, டிரோன் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
ரஷ்யாவின் முக்கியமான விமானத் தளங்களை குறிவைத்து, மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சமே உறுதி செய்துள்ளது. முக்கியமாக, Tu-95 மற்றும் Tu-22 போன்ற குண்டு வீசும் விமானங்களே அதிகம் சேதமடைந்துள்ளன. இந்த விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டவை.
உக்ரைன் இந்த டிரோன் தாக்குதலை மிகச் சிக்கலான முறையில் நிகழ்த்தியுள்ளது. சூசைட் டிரோன்கள், கருப்பு போன்ற நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டு, ரேடாரில் காணப்படாத அளவுக்கு மிகக் குறைந்த உயரத்தில் பறந்து, நேரடியாக போர் விமானங்கள் மீது விழுந்து வெடித்து சேதப்படுத்தியுள்ளன. விமானங்கள் ஹேங்கரில் நின்றபோதே தாக்கப்பட்டதால், பெரும் அளவிலான சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இத்தாக்குதலால் ரஷ்யா – உக்ரைன் போர் வேகமாக அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டது. ரஷ்யா இது போன்ற தாக்குதலுக்கு பதிலடியாக கடுமையான முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகமே இப்போது கவனமாக காத்துக்கொண்டிருக்கும் விஷயம் என்னவென்றால், அமெரிக்கா ஜப்பானுக்கு எதிராக அணுகுண்டுகளைப் பயன்படுத்தியது போல, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுமா என்பதே இப்போது மிக பெரிய கேள்வி.
உலகம் இன்னொரு பேரழிவுக்குப் போகாமல் தடுக்க, இந்த போர் எப்போது முடிவடைகிறது என்பதே இப்போது உலக அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது…