தாய்லாந்தில் மன்னராட்சி முறை அமலில் உள்ளது. இந்நிலையில் தாய்லாந்து ராணியாக செயல்பட்டு வந்த சிரிகிட் கிடியாகரா (வயது 93) நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவை அடுத்து மலேசியாவில் நாளை நடைபெற உள்ள ஏசியான் உச்சிமாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சருன்விரகுல் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
