பாகிஸ்தானில் இப்போது ஒரு பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் அந்த நாட்டில் ராணுவம் தான் உண்மையில் ஆட்சி செய்துகொண்டிருந்தது. அதிலும், தரைப்படைதான்—அதாவது Army தான் —அதிக சக்தி கொண்டதாக இருந்தது. நாட்டை யார் ஆட்சி செய்தாலும், பின்னணி அதிகாரம் ராணுவத்துக்கே உரியது. பிரதமர்கள் கூட ராணுவத்துக்குக் கீழ்ப்படிய வேண்டிய நிலைதான்பாக்சிதானில் நிலவி வருகிறது.
ஆனால், இப்போது அந்த நிலை மாற ஆரம்பித்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்குள்ளேயே விமானப்படைக்கு—அதாவது Air Force-க்கு—புதிய சக்தி பிறக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்களில், விமானப்படைதான் முக்கிய பங்கு வகித்தது. இந்தியா ஏவிய ஏவுகணைகள் மூலமாக பாகிஸ்தானின் நூர் கான், முரித், ஷோர்கோட் ஆகிய 3 விமான தளங்கள் தாக்கப்பட்டது. இது அங்கு பெரும் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தாக்குதல்களில் தரைப்படைக்கு வேலை இல்லை. விமானப்படைதான் முன்னணியில் இருந்தது. இதனால் விமானப்படையின் முக்கியத்துவம் திடீரென உயர ஆரம்பித்திருக்கிறது…
இனி பாகிஸ்தான் செய்யப்போகும் ராணுவ செலவுகளும், ஆயுத கொள்முதலும் பெரும்பாலும் விமானப்படைக்கே இருக்கப்போகிறது. அதனால் விமானப்படைத் தளபதி ஜாகீர் அகமது பாபருக்கு, தரைப்படைத் தளபதி அசிம் முனீரை விட அதிக பவர் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.
ஏற்கனவே, 2018ல் இம்ரான் கான் ராணுவ ஆதரவுடன் பிரதமராக வந்தார். ஆனால் 2022ல் ராணுவத்துடனான மோதல் காரணமாக அவருடைய ஆட்சி வீழ்ந்தது. அந்த அளவுக்கு பாகிஸ்தானில் ராணுவமே முடிவெடுக்கும் சக்தியை வைத்திருந்தது.
ஆனால் இப்போது, அந்த ராணுவத்துக்குள்ளேயே அதிகாரப் போராட்டம் நடக்கிறது. இத்தனை நாள் அந்த நாட்டை கட்டுப்படுத்திய தரைப்படை, இந்திய தாக்குதல்களால் பின்னடைவடைவுக்கு வந்திருக்கிறது. விமானப்படை, புது சக்தியாக அரசியலை நிர்வகிக்க தயாராகி விட்டது.
இதன் எதிர்காலம் என்னவாகும்? பாகிஸ்தான் அரசியலையும், ராணுவத்தையும் இனி விமானப்படையே வழிநடத்தப் போகிறதா? என்பதற்கு நேரம் தான் பதில் சொல்ல வேண்டும்…