Thursday, May 29, 2025

இந்தியா தயாரிக்கும் அதிபயங்கர ‘அரக்கன்’! சோதனையிலே ‘சிதறும்’ பாகிஸ்தான் சீனா!

இந்தியாவின் பாதுகாப்பு திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் தொழில்நுட்பமாக, டிஆர்டிஓ உருவாக்கிய பினாகா எம்கே 3 ராக்கெட் லாஞ்சர் விரைவில் சோதனைக்குத் தயாராகியுள்ளது. இது ஒரு பல ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் ஏவக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையாகும். சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மிகுந்த துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டது.

புனேயில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மற்ற ஆய்வகங்களுடன் இணைந்து உருவாக்கிய இந்த அமைப்பு, பினாகா ராக்கெட் குடும்பத்தில் மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது. முந்தைய எம்கே 1 மற்றும் எம்கே 2 பதிப்புகளைக் காட்டிலும் இது அதிக தூரம் செல்லும், துல்லியமான தாக்குதல் திறனைக் கொண்டது.

பினாகா எம்கே 3 ராக்கெட்டுகள் 250 கிலோ எடையுடன் 300 மில்லிமீட்டர் விட்டத்தில் இருக்கும். இதனால் அதிக எரிபொருள் சேமிப்புடன், பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதிலுள்ள லேசர் கைரோ மற்றும் மைக்ரோஸ்ட்ரிப் ஆண்டெனாக்கள் வழிகாட்டுதலை மிகச்சரியாக்குகின்றன. இதனால் இலக்கை விட 10 மீட்டருக்கும் குறைவான தவறுதலான விலக்குடன் தாக்க முடியும். பழைய மாடல்களில் இது சுமார் 500 மீட்டர் வரை விலகி தாக்கும் என்பதால், இந்த மேம்பாடு மிகவும் முக்கியமானதாகும்.

மேலும், ஏற்கனவே உள்ள பினாகா லாஞ்சர்களை பயன்படுத்தியே இந்த ராக்கெட்டுகளை ஏவ முடியும் என்பதால், கூடுதல் செலவுகள் கிடையாது. ஒவ்வொரு லாஞ்சரும் எட்டு வழிகாட்டப்பட்ட ராக்கெட்டுகளை ஏந்தி, 700×500 மீ பரப்பளவை வெறும் 44 வினாடிகளில் அழிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது.

இந்த ராக்கெட் சிஸ்டம், இந்திய ராணுவத்திற்கு மிகப்பெரிய வலிமையை வழங்கும். குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள முக்கிய ராணுவ தளங்களை தாக்கும் திறனும் இதில் உள்ளது. இந்திய பாதுகாப்புக்கு இது ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news