Thursday, June 5, 2025

அமெரிக்கா தயாரிக்கும் அதிபயங்கர ஆபத்தான போர் விமானம்! முதலில் வாங்கப்போகும் நாடு இதுவா?

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பம் சமீப நாட்களை வளர்ந்து அனைவரையும் வாய்பிளக்க செய்கிறது. அதற்கு ஏற்ப எல்லா துறைகளின் வளர்ச்சியும் Top Gear போட்டு வேகமெடுத்துக்கொண்டிருக்கிறது. அதுவும் அமெரிக்க என்றால் சொல்லவா வேண்டும்? அந்த வகையில் அமெரிக்கா தனது விமானப் படையை மேம்படுத்தும் நடவடிக்கையாக F-47 எனப்படும் புதிய ஆறாவது தலைமுறை போர் விமானத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

சமீபத்தில் அதிபர் டொனால்ட் டிரம்பின் அலுவலகத்திலிருந்து அவற்றைப் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே மிகவும் மேம்பட்ட மற்றும் சக்திவாய்ந்த ஜெட் விமானம் என்று இது குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான போயிங்கால் இந்த F-47 போர் விமானம் தயாரிக்கப்படுகிறது. இந்த புதிய ஜெட் விமானம் F-15, F-16, F-18, F-22 மற்றும் F-35 போன்ற பழைய மாடல்களை பின்னுக்கு தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் பேசும்போது, “இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே F-47 மிகவும் மேம்பட்ட, அதிக திறன்வாய்ந்த, மிகவும் ஆபத்தான விமானமாக இருக்கும்” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு F-47-னின் சற்று குறைக்கப்பட்ட திறன் கொண்ட வகையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பான் தனது விமானக் குழுவில் F-47 விமானத்தைச் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக Eurasian times செய்தி வெளியிட்டிருக்கிறது. அப்படி ஜப்பான் F-47 ஐ வாங்கும் பட்சத்தில் அது அமெரிக்க – ஜப்பான் பாதுகாப்பு நட்புறவை வலுப்படுத்தி, வான்வழிப் போரில் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கிவிடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news