காசா – இஸ்ரேல் மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனாலும், புதிய நம்பிக்கையின் ஒளி வந்து சேரும் முன்னெச்சரிக்கையாக… அமெரிக்காவின் முயற்சியில் ஒரு முக்கிய முன்னேற்றம் கண்டிருக்கிறது உலகம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்வைத்த புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது மிகவும் பரபரப்பான நிலையில், ஹமாஸ் அந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்து வருகின்றது.
இருப்பினும், ஹமாஸ் தரப்பு – இந்த ஒப்பந்தம் அவர்கள் கோரிக்கைகளுக்கு ஏற்ப இல்லை என எதிர்வினை தெரிவித்துள்ளது. முக்கியமாக, இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து பின்வாங்குவதைப் பற்றிய உறுதியில்லை என்பதையே அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் – 60 நாட்கள் போர்நிறுத்தம். அதற்குட்பட்ட காலத்தில், மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் அனுப்பப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஹமாஸ் நிராயுதப்படுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களிடம் உள்ள பணயக்கைதிகள் முதலில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே இஸ்ரேலின் கடுமையான நிபந்தனைகள்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் காசா மனிதாபிமான அறக்கட்டளை, தற்போது மூன்றாவது தளமாக உணவுப் பொருட்களை விநியோகிக்கிறது. இதுவரை சுமார் 1.8 மில்லியன் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது போதவில்லை என ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இஸ்ரேலின் தாக்குதலில் ஏற்கனவே 54,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். காசா முழுவதும் இன்று பட்டினியால் வாடும் நிலை. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளும் இப்போது இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. போர்நிறுத்தம் நிஜமாக அமலாகுமா? மனிதாபிமானம் இந்த மோதலில் வெல்லுமா? என உலகம் முழுவதும் மக்கள் இதற்கான பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கி