பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வசூல் ரீதியாக பெரிய சாதனையை படைத்துள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானதிலிருந்து ‘துரந்தர்’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
தற்போது, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. குறிப்பாக இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.668 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் ரூ.1,000 கோடி வசூலித்த ஒரே இந்திய படம் என்ற சாதனை ’துரந்தர்’ படைத்துள்ளது.
