Tuesday, January 13, 2026

மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபி.ஐ விசாரித்து வருகிறது.

கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயை நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து நேற்று சிபிஐ அலுவலகம் சென்ற விஜய்யிடம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது.

முதற்கட்ட விசாரனை முடிவடைந்த நிலையில், தற்போது தனி விமானத்தில் சென்னை புறப்பட்டுள்ளார். இந்த நிலையில், விஜய்யிடம் ஜனவரி 19 ஆம் தேதி சிபிஐ மீண்டும் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

Related News

Latest News