அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா, அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் பயிற்சி மருத்துவர் கட்டிடத்தில் மோதியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இது தவிர, விமானம் மோதிய குடியிருப்பில் இருந்த மருத்துவ மாணவர்களும் பலியாகினர். இந்த விபத்தில், 274 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் விமானத்தில் பயணித்த 241 பேரும் கட்டடத்தில் இருந்தவர்களில் 33 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், “விசாரணை அறிக்கை வந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அகமதாபாத் விமான விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் இதயத்தை நொறுக்குகின்றன. உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு அனைத்து வகை உதவியும் செய்யப்படும். விசாரணையைத் தொடங்குவதற்காக அதிகாரிகள் உடனடியாகக் களத்துக்கு சென்றனர்.
விசாரணைக்காக உள்துறைச் செயலர் தலைமையில் மற்றொரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் துறை நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தடயவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் விசாரணையில் பங்கேற்றுள்ளனர். மேலும், விமானப் போக்குவரத்துத் துறை செயலர், உள்துறை கூடுதல் செயலர், குஜராத் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த விசாரணைக் குழுவுக்கு 3 மாதம் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் மிகவும் கறாரான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பாதுகாப்பை மேம்படுத்த புதிய வழிமுறைகள் கொண்டு வரப்படும். விசாரணை அறிக்கை வந்தபின் உரிய நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்..
சரி கருப்பு பேட்டி என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா? அதனைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், ‘பிளாக் பாக்ஸ்’ எனப்படும் கருப்புப் பெட்டி விமானப் பதிவு கருவி முக்கியப் பங்கு வகிக்கிறது. விமான விபத்துக்கான உண்மையான காரணத்தை இந்தக் கருவி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானம் “மேடே” MAYDAY அழைப்பை விடுத்த பிறகு ஏற்பட்ட தகவல்தொடர்பு துண்டிப்பு மற்றும் பிற எச்சரிக்கைகள் குறித்த தகவல்களை இது வெளிப்படுத்தும்.
கருப்புப் பெட்டி என்பது விமானப் பயணத்தின்போது விமானம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் ஒரு சிறிய கருவியாகும். இது 1950களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி [David Ronald de Mey Warren] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். வெடிப்புகள், தீ, நீர் அழுத்தம் மற்றும் அதிவேக விபத்துக்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், தண்ணீரில் 20 ஆண்டுகள் அழியாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது..
கருப்புப் பெட்டிகளில் என்ன இருக்கும் என்று தெரியுமா?
ஒரு கருப்புப் பெட்டியில் முக்கியமாக இரண்டு பதிவு கருவிகள் உள்ளன. காக்பிட் குரல் பதிவு கருவி (Cockpit Voice Recorder – CVR) – இது விமானிகளின் குரல்கள், காக்பிட் ஒலிகள் மற்றும் வானொலி தகவல்தொடர்புகளைப் பதிவு செய்கிறது.
விமானத் தரவு பதிவு கருவி (Flight Data Recorder – FDR) – இது உயரம், வேகம், விமானப் பாதை, ஆட்டோபைலட் நிலை போன்ற 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்களைப் பதிவு செய்கிறது.மேலும் விமானத்தின் அளவை பொறுத்து இந்த கருப்பு பெட்டி இதுக்கும்.. பொதுவாக கருப்பு பெட்டி 20-25 செ.மீ நீளம், 12-15 செ.மீ அகலம் கொண்டதாக இருக்கும்.. இது சுமார் 10 கிலோ வரை கொண்டதாக இருக்கும்..
விபத்துக்களை எவ்வாறு தாங்குகிறது தெரியுமா?
கருப்புப் பெட்டி, எஃகு அல்லது டைட்டானியம் போன்ற வலுவான பொருட்களால் ஆனது. 3,400 மடங்கு ஈர்ப்பு விசையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, துருப்பிடிக்காத எஃகு அல்லது டைட்டானியத்தால் ஆன ‘கிராஷ் சர்வைவபிள் மெமரி யூனிட்’ (Crash Survivable Memory Unit). இதில் இருக்கிறது. இந்த கருப்புப் பெட்டி அதிகப்படியான வெப்பம் மற்றும் குளிர் போன்ற வெளிப்புற காரணிகளிலிருந்து தப்ப உதவுகிறது.
சரி, இந்த கருப்பு பேட்டி விமானத்தில் எங்கு இருக்கும் என்று தெரியுமா??
அதாவது விமானத்தில் விபத்தின் தாக்கம் பொதுவாக குறைவாக இருக்கும் பகுதி விமானத்தின் வால் பகுதி ஆகும் எனவே, விமானத்தின் வால் பகுதியில் கடைசியில் இந்த கருவிகள் வைக்கப்படுகின்றன.
விசாரணைக்கு எப்படி உதவுகிறது என்று தெரியுமா?
அதாவது விமான விபத்துக்கான காரணங்களை கண்டறியவும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளை மறுகட்டமைப்பு செய்யவும் இந்த இரண்டு கருவிகளும் உதவுகின்றன. விபத்துக்குப் பிறகு கருப்பு பெட்டிகளிலிருந்து தரவுகளை ஆய்வு செய்ய பொதுவாக 10-15 நாட்கள் ஆகும்.