குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் மிகப்பெரும் துக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோல இந்தியாவில் இதற்கு முன்னர் நடந்த விமான விபத்துகளை இங்கே பார்க்கலாம்.
1973ம் ஆண்டு மே 31ம் தேதி டெல்லி அருகே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 48 பேர் பலியாகினர்.
1976ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 95 பேர் பலியாகினர்.
1978ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி மும்பையில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம், விமானியின் அறையில் இருந்த விமானக் கருவி செயலிழந்ததால் விபத்துக்குள்ளானது. இதில் 213 பேர் உயிரிழந்தனர்.
1982ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்
1988ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி மும்பையிலிருந்து அகமதாபாத்திற்குச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், அகமதாபாத் விமான நிலையத்தை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 135 பேரில் 133 பேர் உயிரிழந்தனர்.
1990ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 92 பேர் உயிரிழந்தனர்.
1993ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அவுரங்கபாத்தின் விமான ஓடுபாதையில், டிரக் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 55 பேர் உயிரிழந்தனர்.
1996ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி டெல்லியில் இருந்து சவுதி அரேபியாவின் தெஹ்ரானுக்குச் சென்று கொண்டிருந்த போயிங் 747 விமானமான சவுதியா விமானம் மற்றும், கஜகஸ்தானின் சிம்கெண்டிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த இலியுஷின் இல்-76 என்ற கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை, டெல்லிக்கு மேற்கே சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள சார்கி தாத்ரி நகரின் மீது மோதின. இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் இருந்த 349 பேரும் கொல்லப்பட்டனர். இது உலகின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகும்.
2000ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி ஏர்லைன்ஸ் ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 55 பயணிகள் மரணம் அடைந்தனர்.
கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி கல்கத்தாவில் இருந்து, டெல்லிக்கு புறப்பட்டு சென்ற அலையன்ஸ் ஏர் விமானம் 7412 பாட்னா அருகே விபத்துக்குள்ளானது இதில் 60 பேர் பலியாகினர்.
2010ம் ஆண்டு மே 22ம் தேதி துபாயில் இருந்து மங்களூருக்கு வந்த ஏர் இந்தியா விமானம் 812, தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்கு உள்ளானது. இதில் 158 பேர் பலியாகினர்.
கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 விமானம், வங்காள விரிகுடாவில் விழுந்து நொறுங்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
2019ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 விமானம், தரை கட்டுப்பாட்டுத் துறையுடனான தொடர்பை இழந்ததால், அருணாச்சலப் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில்13 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா நேரத்தில் துபாயில் இருந்து கேரள மாநிலம், கோழிக்கோட்டுக்கு வந்த ஏர் இந்தியா விமானம் 1344 ஓடுபாதையில் இரண்டாக உடைந்து, விபத்துக்கு உள்ளானது. இதில் விமானிகள் உட்பட 19 பேர் பலியாகினர்.
இந்த 2025ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம். சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.