Thursday, August 7, 2025
HTML tutorial

கானா நாட்டில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து ; 8 பேர் பரிதாப பலி

கானா நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, ஒபுவாசி நகரத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. இதில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் பயணம் செய்துள்ளனர்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில், கானாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா உட்பட 8 பேர் பலியானதாக, அந்நாட்டின் அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News