தான்சானியாவின் வடக்கு பகுதியில், சபாசபா என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பேருந்தின் டயர் பழுதானதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.